
கோப்புப்படம்
நாட்டில் இன்று புதிதாக 1,109 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,109 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 11,492ஆக உள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 43 போ் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் மொத்த கரோனா பாதிப்பு 4,30,33,067 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனால் மொத்த உயிரிழப்பு 5,21,573 ஆக உயா்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 1,213 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 4,25,00,002 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.
நாட்டில் இதுவரை 185.38 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...