இந்தியாவில் இதுவரை 186.72 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டன: சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 186.30 கோடி கரோனா தடுப்பூசிகள் டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 186.72 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டன: சுகாதாரத்துறை
Updated on
1 min read

இந்தியாவில் இதுவரை 186.30 கோடி கரோனா தடுப்பூசிகள் டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் (இன்று காலை 7 மணி வரை)  2,27,79,246 தடுப்பூசி மையங்கள் மூலம் இதுவரை மொத்தம்1,86,72,15,865 (186.72 கோடி) தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது. 

12-14 வயதிற்குள்பட்ட இளம் பருவத்தினருக்கு கரோனா தடுப்பூசி மார்ச் 16 இல் தொடங்கப்பட்டது. இதுவரை, சுமார் 2,47,06,692-க்கும் அதிகமான முதல்கட்ட தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது.  

18-59 வயதினருக்கு கடந்த ஏப்ரல் 10-ம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. இதுவரை 1,85,860 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

15-18 வயதிற்குள்பட்டவர்கள் இரண்டாவது தவணையாக 4,06,00,205 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

மேலும், நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,247 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 928 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை (பெருந்தொற்றின் தொடக்கத்திலிருந்து) 4,25,11,701 ஆக உள்ளது.

நாட்டில் தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை  11,860 ஆகக் குறைந்துள்ளது, இது நாட்டின் மொத்த தொற்று பாதிப்பில்  0.03 சதவிகிதம் ஆகும். குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.76 சதவிகிதமாக உள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 4,01,909 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் (83,25,06,755 ) கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com