மீண்டும் 2 ஆயிரத்தை கடந்த கரோனா: சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் ஒருநாள் எண்ணிக்கை மீண்டும் 2 ஆயிரத்தை கடந்துள்ளது. சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
மீண்டும் 2 ஆயிரத்தை கடந்த கரோனா: சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
Updated on
1 min read

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் ஒருநாள் எண்ணிக்கை மீண்டும் 2 ஆயிரத்தை கடந்துள்ளது. சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இன்றைய கரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 2,067 பேருக்கு புதிதாக கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், நேற்று ஒரே நாளில் 40 பேர் பலியானதையடுத்து மொத்த எண்ணிக்கை 5,22,006ஆக உயர்ந்துள்ளது.

நோய்த் தொற்றுக்கு சிகிச்சையில் இருப்போா் எண்ணிக்கை 11,860இல் இருந்து 12,340ஆக அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 1,547 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், கரோனாவிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4,25,13,248ஆக உள்ளது.

இதுவரை 186.90 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com