திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

அரிய நிகழ்வு: கர்நாடகத்தில் இரட்டைக் குட்டிகளை ஈன்ற யானை

மிகவும் அரிய நிகழ்வாக, கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் பந்திபூர் புலிகள் காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வந்த யானை, இரட்டைக் குட்டிகளை ஈன்றுள்ளது.

News image

கர்நாடகத்தில் இரட்டைக் குட்டிகளுடன் தாய் யானை

Updated On :21 ஏப்ரல் 2022, 5:43 pm IST


மிகவும் அரிய நிகழ்வாக, கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் பந்திபூர் புலிகள் காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வந்த யானை, இரட்டைக் குட்டிகளை ஈன்றுள்ளது.

வழக்கமாக யானை இரட்டைக் குட்டிகளை ஈன்றெடுப்பது என்பது அரிதிலும் அரிதானது. இரட்டைக் குட்டிகளுடன் தாய் யானை சுற்றிவரும் விடியோ சமூக வலைத்தளங்களில் பலரால் பகிரப்பட்டு, விரும்பப்பட்டு வருகிறது.

வனவிலங்குகள் நல ஆர்வலர்களும், விலங்குகள் ஆர்வலர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் இந்த அரிய நிகழ்வை கொண்டாடி வருகிறார்கள்.

யானையின் உருவம் மற்றும் கர்ப்பக் காலம் அதிகம் என்பதால், யானைகள் ஒன்றுக்கு மேற்பட்ட குட்டிகளை ஈன்றெடுப்பது என்பது அரிதான நிகழ்வு என்பதால், இயற்கை ஆர்வலர்கள் பலரும், இந்த இரட்டை யானைக் குட்டிகளை கொண்டாடி மகிழ்கிறார்கள்.

இரட்டைக் குட்டிகளைக் காண, புலிகள் சரணாலயத்துக்கு வரும் நாள்களில் ஏராளமானோர் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து புலிகள் சரணாலயத்தின் நிர்வாகிகள் கூறுகையில், மூன்று நாள்களுக்கு முன்பு தாய் யானை குட்டிகளை ஈன்றது. தாய் யானைக்கு பிரசவ வலி ஏற்பட்டுதம் அது அருகிலிருக்கும் நீர்நிலைக்குச் சென்றது. சிறிது நேரம் கழித்து தாய் யானை மெல்ல மேலே ஏறி வந்தது. பிறகு, அதன் இரண்டு குட்டிகளும் வெளியே வந்தன. அப்போது அங்கே இருந்த சுற்றுலாப் பயணிகளும், சரணாலய ஊழியர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து கரகோஷம் எழுப்பி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அந்த நிகழ்வை அங்கிருந்த பலரும் தங்களது செல்லிடப்பேசியில் புகைப்படம் மற்றும் விடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர அது பலரால் பார்க்கப்பட்டு வைரலானது.

இதற்கு முன்பு, இதுபோன்ற இரட்டை யானைக் குட்டிகள் பிறந்தது. இங்கு 1980களில் பதிவாகியிருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

வழக்கமாக யானைகள் குட்டிகளை ஈன்றெடுப்பதில் ஒரு சதவீதம் மட்டுமே இரட்டைக் குட்டிகள் பிறக்க வாய்ப்பிருக்கும். அதிலும், இரட்டைக் குட்டிகள் பிறக்கும்போது இரண்டில் ஒன்றோ அல்லது இரண்டுமோ இறக்கும் அபாயமும் அதிகம் என்கிறார்கள். இரண்டு குட்டிகளுக்கு போதுமான தாய்ப்பால் கிடைக்காது என்பதால், பிறந்த ஒரு சில மாதங்களுக்குள் ஒரு குட்டி இறக்கும் அபாயமும் இருக்குமாம்.

உலகில் எப்போதாவது இதுபோன்ற அரிய நிகழ்வு பதிவாகும். பொதுவாக யானைக் குட்டிகள் இரண்டு ஆண்டுகளுக்கு தாய்ப்பால் குடிக்குமாம். இதனால், இரட்டை யானைக் குட்டிகளைப் பெற்றெடுக்கும் யானைகள் அந்த இரண்டு ஆண்டுகளுக்குள் பல சவால்களை சமாளிக்கும் நிலைக்குத் தள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.