ஆந்திர மாநில சுங்கச்சாவடி ஒன்றில் கட்டணம் செலுத்தாமல் சென்ற லாரியை நிறுத்த முயன்ற ஊழியரை லாரி முன்புறம் வைத்து ஓட்டிச்சென்ற ஓட்டுநரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியது.
கட்டணம் செலுத்தாமல் சென்ற ஓட்டுநரைப் பிடிக்கும் வகையில் லாரியின் முன்புறம் சுங்கச்சாவடி ஊழியர் ஏறியுள்ளார். அப்போதும் லாரியை நிறுத்தாத ஓட்டுநர், தொங்கியபடி நின்றிருந்த ஊழியருடன் சுமார் 10 கீலோமீட்டர் தொலைவுக்கு லாரியை ஓட்டிச்சென்றுள்ளார்.
ஆந்திர மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள அமக்கதாடு அருகேவுள்ள சுங்கச்சாவடியில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த லாரி கட்டணத்தை செலுத்தாமல் சென்றுள்ளது.
இதனால் சுங்கச்சாவடி ஊழியர் சீனிவாசலு லாரியின் முன் பக்கம் இருக்கும் பம்பர் மீது ஏறி ஓட்டுநரைப் பிடிக்க முயன்றுள்ளார். ஆனால் ஓட்டுநர் ஊழியரைப் பொருட்படுத்தாமல், லாரியை வேகமாக இயக்கியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சுங்கச்சாவடி ஊழியர்கள் இருசக்கர வாகனத்தில் லாரியைப் பின்தொடர்ந்து வந்துள்ளனர். பின்னர் தேசிய நெடுஞ்சாலை ரோந்துப் பணி காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
லாரி ஓட்டுநரை மற்றொரு வாகனத்தில் துரத்திப் பிடித்த காவலர்கள், ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பான விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இன்றைய செய்திகள் ஜூன் 19 - நேரலை!
மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்!
மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்
நேரம் தவறாமை, நேர்த்தி, தொழிலுக்கு மரியாதை... விஜய் நேர்காணல் -2!
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



