எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

முதல் முறையாக சிறிய செயற்கைக் கோள் ஊர்தியில் விண்வெளிக்கு செயற்கைக் கோள் அனுப்பும் இஸ்ரோ

இஸ்ரோ முதல் முறையாக சிறிய செயற்கைக் கோள் ஏவும் ஊர்தியின் மூலம் விண்வெளிக்கு செயற்கைக் கோளினை அனுப்ப உள்ளது. 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 3:30 pm IST

இஸ்ரோ முதல் முறையாக சிறிய செயற்கைக் கோள் ஏவும் ஊர்தியின் மூலம் விண்வெளிக்கு செயற்கைக் கோளினை அனுப்ப உள்ளது. 

இந்த செயற்கைக் கோளினை இஸ்ரோ சென்னையில் இருந்து 135 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா செயற்கைக் கோள் ஏவுதளத்தில் இருந்து விண்ணுக்கு அனுப்புகிறது. 

பிஎஸ்எல்வி (PSLV) மற்றும் ஜிஎஸ்எல்வி (GSLV) செயற்கைக் கோள் ஊர்திகளின் மூலம் பல செயற்கைக் கோள்களை இஸ்ரோ விண்வெளிக்கு வெற்றிகரமாக அனுப்பியுள்ளது. இந்தியாவின் மிகுந்த நம்பிக்கைக்குரிய செயற்கைக் கோள் அனுப்பும் ஊர்தி என பிஎஸ்எல்வி-யினைக் குறிப்பிட்டால் அது மிகையாகாது. அந்த வரிசையில் சிறிய செயற்கைக் கோள் அனுப்பும் ஊர்தியும் இணைய உள்ளது. 

விஞ்ஞானிகள் கடந்த சில வாரங்களாக சிறிய செயற்கைக் கோள் ஏவும் ஊர்திகளை உருவாக்குவதில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்த சிறிய செயற்கைக் கோள் ஏவும் ஊர்திகள் மூலம் 500 கிலோ எடையுள்ள செயற்கைக் கோள்களை விண்வெளியில் 500 கிலோ மீட்டர் உயரத்தில் நிலைநிறுத்த முடியும். பிஎஸ்எல்வி செயற்கைக் கோள் ஏவும் ஊர்திகளைக் காட்டிலும் இந்த சிறிய செயற்கைக் கோள் ஏவும் ஊர்தி 10 மீட்டர் குறைந்த நீளம் கொண்டது. பிஎஸ்எல்வி ஊர்தியின் நீளம் 44 மீட்டராக இருக்க இந்த சிறிய செயற்கைக் கோள் ஊர்தியின் நீளம் 34 மீட்டரே ஆகும். அதேபோல அகலத்திலும் இந்த சிறிய செயற்கைக் கோள் ஏவும் ஊர்தி சற்று குறைவாகவே உள்ளது. பிஎஸ்எல்வி 320 டன் எடையுள்ள செயற்கைக் கோள்களை விண்வெளிக்கு சுமந்து செல்ல முடியும். ஆனால், இந்த சிறிய செயற்கைக் கோள் ஊர்தியால் 120 டன்கள் மட்டுமே சுமந்து செல்ல முடியும்.
 

இந்த சிறிய செயற்கைக் கோள் ஊர்தியினைக் கொண்டு நாளை (ஆகஸ்ட் 7) புவி கண்காணிப்பு செயற்கைக் கோள் மற்றும் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா சார்பில் மாணவர்களால் உருவாக்கப்பட்டுள்ள செயற்கைக் கோள் ஆகியவை விண்ணில் ஏவப்பட உள்ளன. இஸ்ரோ சார்பில் மற்ற செயற்கைக் கோள்கள் ஊர்திகளில் ஏவப்படுவதற்கு 25 மணி நேரத்தில் இருந்து நேரக் குறைப்பு செய்யப்படும். ஆனால், இந்த சிறிய செயற்கைக் கோள் ஏவும் ஊர்திக்கு 5 மணி நேரத்தில் இருந்து நேரக் குறைப்பு செய்யப்பட உள்ளது. அதன்படி, நாளை காலை 4.18 மணி முதல் நேரக் குறைப்பு தொடங்கி சரியாக காலை 9.18 மணிக்கு செயற்கைக் கோள் சதீஷ் தவான் விண்வெளி நிலையத்தின் முதல் ஏவுகணை தளத்தில் இருந்து ஏவப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.