மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ் மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

முதல் முறையாக சிறிய செயற்கைக் கோள் ஊர்தியில் விண்வெளிக்கு செயற்கைக் கோள் அனுப்பும் இஸ்ரோ

இஸ்ரோ முதல் முறையாக சிறிய செயற்கைக் கோள் ஏவும் ஊர்தியின் மூலம் விண்வெளிக்கு செயற்கைக் கோளினை அனுப்ப உள்ளது. 

News image
Updated On :6 ஆகஸ்ட் 2022, 6:02 pm IST

இஸ்ரோ முதல் முறையாக சிறிய செயற்கைக் கோள் ஏவும் ஊர்தியின் மூலம் விண்வெளிக்கு செயற்கைக் கோளினை அனுப்ப உள்ளது. 

இந்த செயற்கைக் கோளினை இஸ்ரோ சென்னையில் இருந்து 135 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா செயற்கைக் கோள் ஏவுதளத்தில் இருந்து விண்ணுக்கு அனுப்புகிறது. 

பிஎஸ்எல்வி (PSLV) மற்றும் ஜிஎஸ்எல்வி (GSLV) செயற்கைக் கோள் ஊர்திகளின் மூலம் பல செயற்கைக் கோள்களை இஸ்ரோ விண்வெளிக்கு வெற்றிகரமாக அனுப்பியுள்ளது. இந்தியாவின் மிகுந்த நம்பிக்கைக்குரிய செயற்கைக் கோள் அனுப்பும் ஊர்தி என பிஎஸ்எல்வி-யினைக் குறிப்பிட்டால் அது மிகையாகாது. அந்த வரிசையில் சிறிய செயற்கைக் கோள் அனுப்பும் ஊர்தியும் இணைய உள்ளது. 

விஞ்ஞானிகள் கடந்த சில வாரங்களாக சிறிய செயற்கைக் கோள் ஏவும் ஊர்திகளை உருவாக்குவதில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்த சிறிய செயற்கைக் கோள் ஏவும் ஊர்திகள் மூலம் 500 கிலோ எடையுள்ள செயற்கைக் கோள்களை விண்வெளியில் 500 கிலோ மீட்டர் உயரத்தில் நிலைநிறுத்த முடியும். பிஎஸ்எல்வி செயற்கைக் கோள் ஏவும் ஊர்திகளைக் காட்டிலும் இந்த சிறிய செயற்கைக் கோள் ஏவும் ஊர்தி 10 மீட்டர் குறைந்த நீளம் கொண்டது. பிஎஸ்எல்வி ஊர்தியின் நீளம் 44 மீட்டராக இருக்க இந்த சிறிய செயற்கைக் கோள் ஊர்தியின் நீளம் 34 மீட்டரே ஆகும். அதேபோல அகலத்திலும் இந்த சிறிய செயற்கைக் கோள் ஏவும் ஊர்தி சற்று குறைவாகவே உள்ளது. பிஎஸ்எல்வி 320 டன் எடையுள்ள செயற்கைக் கோள்களை விண்வெளிக்கு சுமந்து செல்ல முடியும். ஆனால், இந்த சிறிய செயற்கைக் கோள் ஊர்தியால் 120 டன்கள் மட்டுமே சுமந்து செல்ல முடியும்.
 

இந்த சிறிய செயற்கைக் கோள் ஊர்தியினைக் கொண்டு நாளை (ஆகஸ்ட் 7) புவி கண்காணிப்பு செயற்கைக் கோள் மற்றும் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா சார்பில் மாணவர்களால் உருவாக்கப்பட்டுள்ள செயற்கைக் கோள் ஆகியவை விண்ணில் ஏவப்பட உள்ளன. இஸ்ரோ சார்பில் மற்ற செயற்கைக் கோள்கள் ஊர்திகளில் ஏவப்படுவதற்கு 25 மணி நேரத்தில் இருந்து நேரக் குறைப்பு செய்யப்படும். ஆனால், இந்த சிறிய செயற்கைக் கோள் ஏவும் ஊர்திக்கு 5 மணி நேரத்தில் இருந்து நேரக் குறைப்பு செய்யப்பட உள்ளது. அதன்படி, நாளை காலை 4.18 மணி முதல் நேரக் குறைப்பு தொடங்கி சரியாக காலை 9.18 மணிக்கு செயற்கைக் கோள் சதீஷ் தவான் விண்வெளி நிலையத்தின் முதல் ஏவுகணை தளத்தில் இருந்து ஏவப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.