புது தில்லி: வங்கிகளில் கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கப்படுவது வெகுவாகக் குறைந்திருப்பதாக மத்திய நிதியமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
2016ஆம் ஆண்டு நாட்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு கள்ளநோட்டுகள் கண்டுபிடிக்கப்படுவது அதிகரித்துள்ளதா என்று மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய நிதித் துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | பிகாரில் அரசியல் மாற்றம்: சோனியாவை சந்திக்கிறார் நிதிஷ் குமார்?
அண்டை நாடுகளிலிருந்து கள்ள நோட்டுகள் கடத்திக் கொண்டு நாட்டுக்குள் கொண்டு வரும் சம்பவங்கள் நடந்திருப்பதாக புலனாய்வுத் துறை மூலம் கண்டறிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியிடங்களில் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ள போதிலும், வங்கிப் பணிகளின்போது கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கப்படுவது குறைந்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
அதாவது, 2016 - 17ஆம் நிதியாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை 7.62 லட்சமாக இருந்த நிலையில், இது 2020 - 21ஆம் நிதியாண்டில் 2.08 லட்சம் நோட்டுகளாகக் குறைந்துள்ளதாகவும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK

ஐபிஎல் 2026: 154 கி.மீ/மணி வேகத்தில் பந்துவீசிய குஜராத் வீரர்!

புதுச்சேரியில் அதிக வாக்கு சதவிகிதத்தில் வெற்றி பெறுவேன்: சார்லஸ் மார்ட்டின்

”மிதுன ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


