புது தில்லி: நாட்டில் ஒரேநாளில் மேலும் 15, 754 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 15,754 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 4,42,77,194 ஆக உள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 1,01,830 ஆக உள்ளது.
இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 47 போ் கரோனாவால் உயிரிழந்துவிட்டனா். இதனால் மொத்த உயிரிழப்பு 5,27,253 ஆக உயா்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 15,220 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 4,36,85,535 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.
இதையும் படிக்க: கிருஷ்ண ஜெயந்தி: பிரதமர் மோடி வாழ்த்து
நாட்டில் இதுவரை 209.27 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. ஒரே நாளில் நேற்று 31,52,882 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.