காமன்வெல்த்: ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்காமன்வெல்த்: ஜூடோவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அஸ்மிதாமக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!
/

பயணிகளின் தரவுகளை தனியாருக்கு விற்கும் இந்தியன் ரயில்வே?

வணிக நோக்கங்களுக்காக ரயில் பயணிகளின் தகவல்களை இந்தியன் ரயில்வே தனியாருக்கு விற்பனை செய்ய உள்ளது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :1 பிப்ரவரி 2024, 3:36 pm IST

வணிக நோக்கங்களுக்காக ரயில் பயணிகளின் தகவல்களை இந்தியன் ரயில்வே தனியாருக்கு விற்பனை செய்ய உள்ளது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியன் ரயில்வே நிறுவனத்திற்கு சொந்தமான ஐஆர்சிடிசி இணையதளத்தில் பயணிகள் ரயில் முன்பதிவை மேற்கொண்டு வருகின்றனர். இதில் பயணிகளின் பெயர், வயது, முகவரி, அலைபேசி எண்கள் உள்ளிட்ட பல தகவல்களை இந்தியன் ரயில்வே பெற்று முன்பதிவை மேற்கொள்கிறது. 

இந்நிலையில் பயணிகளின் தரவுகளை விற்பனை செய்வதற்கு தனியார் நிறுவனங்களிடம் இந்தியன் ரயில்வே டெண்டர் கோரியுள்ளது. வருவாயை அதிகரிக்கும் முயற்சியாக பயணிகளின் தரவுகளை தனியார் நிறுவனங்களிடம் விற்பனை செய்யும் இந்த நடவடிக்கை பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

சுற்றுலா, தங்குமிடம், நிதி, உள்கட்டமைப்பு வளர்ச்சி, காப்பீட்டுத்துறை, சுகாதாரம், உற்பத்தி, விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்து, ஆற்றல் உருவாக்கம் உள்ளிட்ட துறைகளில் பயணிகளின் இந்தத் தரவுகள் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ரூ.1000 கோடி வரை வருவாய் ஈட்டப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.

மக்களின் தரவுகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய அரசு வருவாய் ஆதாரத்திற்காக தனியார் நிறுவனங்களிடம் விற்பனையில் ஈடுபடுவதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.