இந்திய கடற்படை கப்பலில் இருந்து ஏவப்பட்ட குறுகிய தொலைவு ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக டிஆர்டிஓ தெரிவித்துள்ளது.
வேகமாக நகரக்கூடிய ஆளில்லா விமானங்கள் போன்ற குறுகிய தொலைவு இலக்குகளை செங்குத்தாக ஏவப்பட்டு துல்லியமாக தாக்கி அழிக்கும் புதிய ஏவுகணையை டிஆர்டிஓ தயாரித்துள்ளது.
இந்த ஏவுகணையை, ஒடிசாவின் சண்டிப்பூர் கடல்பகுதியிலிருந்து இந்திய கடற்படை கப்பல் மூலம் இன்று ஏவப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில், இலக்கை துல்லியமாக தாக்கி ஏவுகணை அழித்தது.