நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

குலாம் நபி ஆசாத் காங்கிரஸில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டார்: மத்திய அமைச்சர்

காங்கிரஸில் இருந்து குலாம் நபி ஆசாத் இறுதியாக தன்னை விடுவித்துக் கொண்டதாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். 

News image
Updated On :27 ஆகஸ்ட் 2022, 3:34 pm IST

காங்கிரஸில் இருந்து குலாம் நபி ஆசாத் இறுதியாக தன்னை விடுவித்துக் கொண்டதாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் நேற்று (ஆகஸ்ட் 26) காங்கிரஸில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். இதனையடுத்து, மத்திய அமைச்சரும் மற்றும் காங்கிரஸில் குலாம் நபி ஆசாத் உடன் பயணித்தவருமான மத்திய அமைச்சர் சிந்தியாவின் இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

இது குறித்து பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் மத்திய அமைச்சர் கூறியதாவது: “ காங்கிரஸில் நீண்ட ஆண்டுகளாக நீடித்து வந்த குழப்பம் தற்போது தெளிவாகத் தெரிகிறது. குலாம் நபி ஆசாத் ஒரு வழியாக இறுதியில் காங்கிரஸில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டுள்ளார். காங்கிரஸின் அனைத்து விதமான பதவிகளில் இருந்தும் குலாம் நபி ஆசாத் விலகியுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் குழந்தைத்தனமான முடிவுகளை அவர் கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார்.” என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.