வீட்டில் தொழுகை நடத்தியதற்காக வழக்கு பதிந்த செயலை கண்டித்து அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின் தலைவரும், எம்.பி,யுமான அசாதுதீன் ஓவைசி கண்டனம் தெரிவித்துள்ளார்.
உத்திரப்பிரதேசம், மொராதாபத் மாவட்டம் சாஜ்லெட் பகுதியில் பள்ளிவாசல்கள் அருகில் இல்லாததால், வீட்டில் அதிக நபர்கள் திரண்டு தொழுகை நடத்தியதாக விடுகளின் உரிமையாளர் உட்பட 16 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில் அந்த இரண்டு உரிமையாளர்களும் தலைமறைவாகியுள்ளனர் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுக்குறித்து அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின் தலைவரும், எம்.பி,யுமான அசாதுதீன் ஓவைசி கூறியதாவது:
தொழுகை எங்கு வேண்டுமானாலும் செய்யலாமென உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. பின்பு ஏன் வீட்டில் தொழுகை நடத்தியது கேள்விக்குள்ளாக்கப்படுகிறது? இது அநியாயம்.