தற்கொலை செய்து கொள்பவர்கள் பட்டியல்: தமிழகம் 2வது இடம்! 

2021ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொள்பவர்கள் பட்டியலில் இந்திய அளவில் தமிழகம் இரண்டாம் இடத்தில் இருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்

2021ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொள்பவர்கள் பட்டியலில் இந்திய அளவில் தமிழகம் இரண்டாம் இடத்தில் இருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது. 

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தகவலின்படி மகாராஷ்டிரா 22,207 தற்கொலைகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. தமிழகம் 18,295 தற்கொலைகளுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறது.

தமிழகத்தில் 2020ஐ விட 2021இல் 0.5 சதவிகிதம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தேசிய அளவில் பார்த்தால் 11.5 சதவிகிதம் தற்கொலைகள் தமிழகத்தில் மட்டுமே நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அளித்த தகவலின்படி 25.6 சதவிகிதம் பேர் தினக்கூலி செய்பவர்கள், 14.1 சதவிகிதம் குடும்ப தலைவிகள், 12.3 சதவிகிதம் சுய தொழில் பணி புரிபவர்கள், 9.7 சதவிகிதம் ஊதியம் பெறுபவர்கள், 8.4 சதவிகிதம் வேலையில்லாதவர்கள், 8 சதவிகிதம் பள்ளி மாணவ மாணவிகளும் அடங்கும்.

கர்நாடகாவில் 2469 பேரும், ஆந்திராவில் 2496 பேரும் நோய்மையின் காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

“சமூகம் இன்னும் ஆதரவு தேவைப்படும் நபர்களை ஒதுக்கி வைக்கிறது, மேலும் அவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது மனநலம் சரியில்லாதவர்கள் என்ற முத்திரை குத்தப்படுகிறார்கள். இவர்களுக்கு என்.ஜி.ஓ.உதவி எண்களை வழங்குகிறது” என ஸ்ராதாவின் தலைவர் சுகன்யா நம்பியார் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com