மேயர் தேர்தலில் மாற்றி வாக்களிக்க ஆம் ஆத்மி கவுன்சிலர்களுக்கு பாஜக ரூ.50 லட்சம் வரை தருவதாக பேரம் பேசியிருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அண்மையில் நடைபெற்ற புது தில்லி மாநகராட்சித் தேர்தலில் வென்ற ஆம் ஆத்மி கவுன்சிலர்களை வாங்குவதற்கு பேரம் பேசும் தரம் தாழ்ந்த செயலில் பாஜக ஈடுபட்டிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. குஜராத்தில் காங்கிரஸ் அடைந்தது தோல்வியே அல்ல! அதற்கும் மேல்
இதுவரை எம்எல்ஏக்களை வாங்கி, ஆட்சியைக் கவிழ்க்கும் யுக்தியை மேற்கொண்டு வந்த பாஜக, தற்போது கவுன்சிலர்களையும் வாங்க திட்டமிட்டுள்ளதாக ஆம் ஆத்மியின் முக்கிய தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.
மூன்று கவுன்சிலர்களுடன் இன்று செய்தியாளர்களை சந்தித்த சஞ்சய் சிங், புது தில்லி மாநகராட்சித் தேர்தலில் 30க்கும் குறைவான இடங்களைப் பெற்ற பாஜக, எவ்வாறு மகாராஷ்டிரம், அருணாசலம், உத்தரகண்ட், மத்தியப் பிரதேசம், கர்நாடகம், கோவா, குஜராத் மாநிலங்களில் எம்எல்ஏக்களை வாங்கும் குதிரை பேரத்தில் ஈடுபட்டதோ, அவ்வாறு கவுன்சிலர்களையும் வாங்கும் தரம் தாழ்ந்த அரசியலை செய்துள்ளது.
இதையும் படிக்க.. ஹிமாசலில் பாஜக எப்படி தோற்றிருக்கிறது என்று பாருங்கள்!
பணத்தைக் காட்டியும் மிரட்டல் விடுத்தும் மக்களின் விருப்பத்தை அவமதித்து, நாட்டின் ஜனநாயகத்தைக் கொல்பவர்கள் மீது தில்லி காவல்துறை ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
30க்கும் குறைவான இடங்களைப் பெற்ற போதும்,பாஜகவைச் சேர்ந்தவர்தான் மேயராக வேண்டும் என்று அக்கட்சி கருதுகிறது. எனவே, வெறும் 10 கவுன்சிலர்களை வாங்க ரூ.100 கோடியில் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு கவுன்சிலருக்கு ரூ.10 கோடி குதிரைப் பேரத்தில் ஈடுபடுகிறது பாஜக என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தஞ்சைக்கு பதிலாக செங்கிப்பட்டிக்கு அழைத்துச் செல்லப்படும் உதயநிதி!

இந்திய அணிக்கு புதிய ஃபீல்டிங் பயிற்சியாளர் நியமனம்..! யார் இந்த சுபதீப் கோஷ்?

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 3 காசுகள் சரிந்து ரூ. 95.40 ஆக நிறைவு!

வெற்றி விழாவில் நன்றி சொல்கிறேன்... உதயநிதி கைதானதைக் குறிப்பிட்டு பேசிய மாதவன்!
விடியோக்கள்

உதயநிதியை இளைய கலைஞர் ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள்! | R.S. Bharathi | DMK | TVK



