'இந்தியாவில் இருப்பது காந்தியின் காங்கிரஸ் அல்ல; இத்தாலி காங்கிரஸ்' :பாஜக

பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்ய வேண்டும் என தொண்டர்கள் மத்தியில் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் பேசியதற்கு, மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா கண்டனம் தெரிவித்துள்ளார். 
நரோட்டம் மிஸ்ரா (கோப்புப் படம்)
நரோட்டம் மிஸ்ரா (கோப்புப் படம்)

பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்ய வேண்டும் என தொண்டர்கள் மத்தியில் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் பேசியதற்கு, மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா கண்டனம் தெரிவித்துள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடியை கொல்லத் தயாராக இருங்கள் என மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ராஜா படேரியா, தொண்டர்கள் மத்தியில் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

படேரியாவின் இத்தகைய பேச்சுக்கு பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், பாஜக உள் துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா கண்டனம் தெரிவித்துள்ளார். 

ராஜா படேரியாவின் பேச்சுக்கு அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்திய மிஸ்ரா, இந்தியாவில் தற்போது நடைபெற்று வருவது காந்தியின் காங்கிரஸ் அல்ல; முசோலினியின் எண்ணங்கள் கொண்ட இத்தாலி காங்கிரஸ் என விமர்சித்துள்ளார். 

ராஜா படேரியாவின் பேச்சுக்கு மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது, நாட்டின் நம்பிக்கையாக பிரதமர் மோடி திகழ்கிறார். தேர்தல் போரில் காங்கிரஸ் கட்சியால் பிரதமர் மோடியை எதிர்கொள்ள முடியவில்லை. அதனால், பிரதமரைக் கொல்ல வேண்டும் எனக் குறிப்பிடுகிறார். இது இயலாமையின் உச்சகட்டம். முழுக்க முழுக்க பாஜகவின் மீதுள்ள வெறுப்புணர்வு. காங்கிரஸின் உண்மையான முகம் வெளிப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. விரைவில் இந்த சர்ச்சைப் பேச்சுக்கு வழக்குப்பதிவு செய்யப்படும் எனக் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com