தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மகாராஷ்டிர அரசு நக்சல்களுக்கு ஒருபோதும் பயப்படாது: தேவேந்திர ஃபட்னாவிஸ்

நக்சலைட்டுகளுக்கு எதிரான மகாராஷ்டிர அரசின் தெளிவான நிலைப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டிய துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், நக்சல்களுக்கு ஒருபோதும் பயப்படாது என்று கூறினார்.

News image

பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸ்

Updated On :19 டிசம்பர் 2022, 11:23 am

DIN

நக்சலைட்டுகளுக்கு எதிரான மகாராஷ்டிர அரசின் தெளிவான நிலைப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டிய துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், நக்சல்களுக்கு ஒருபோதும் பயப்படாது என்று கூறினார்.

நக்சல்களுக்கு நாங்கள் தக்க பதிலளிப்போம். கட்சிரோலியின் நக்சலிசத்தை ஒரு சில தாலுகாக்கள் வரை கட்டுப்படுத்தியுள்ளோம். கட்சிரோலி இளைஞர்கள் இன்று நக்சலிசத்தை நோக்கிச் செல்வதை நிறுத்திவிட்டனர் என்று சட்டப் பேரவையில் உரையாற்றும்போது பட்னாவிஸ் இவ்வாறு தெரிவித்தார்.

சுர்ஜாகர் திட்டத்தை முடிப்பதில் அரசாங்கத்தின் அணுகுமுறையை வலியுறுத்திய ஃபட்னாவிஸ், நக்சலைட்டுகள் வேண்டுமென்றே உள்ளூர் மக்களைத் தூண்டிவிடுகிறார்கள் என்று கூறினார்.

மேலும் கட்சிரோலி எம்எல்ஏ தர்மாராவ் பாபா அத்ரமுக்கு நக்சலைட்டுகளிடம் இருந்து மிரட்டல் வந்ததையடுத்து, அரசு தீவிரமாக கவனத்தில் கொண்டுள்ளது. அவர்களுக்குத் தேவையான அனைத்து பாதுகாப்பும் வழங்கப்படுகிறது. சுர்ஜாகர் திட்டத்தை அரசு நிறைவேற்றும் என்று அவர் மேலும் கூறினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.