ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

பிரதமருக்கு கடிதம் எழுதுங்கள்! சுகாதாரத் துறை அமைச்சரை சாடிய காங்கிரஸ்

பிரதமர் நரேந்திர மோடி நடத்தும் கூட்டங்களுக்கு கரோனா கட்டுப்பாடுகளைப் பின்பற்றுமாறு கடிதம் எழுத வேண்டும் என சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாக்கு காங்கிரஸ் அறிவுறுத்தியுள்ளது. 

News image
கோப்புப் படம்
Updated On :21 டிசம்பர் 2022, 11:45 am

DIN

பிரதமர் நரேந்திர மோடி நடத்தும் கூட்டங்களுக்கு கரோனா கட்டுப்பாடுகளைப் பின்பற்றுமாறு கடிதம் எழுத வேண்டும் என சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாக்கு காங்கிரஸ் அறிவுறுத்தியுள்ளது. 

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையில் நடக்கும் ஒற்றுமைப் பயணத்தில், கரோனா விதிமுறைகளைப் பின்பற்றுமாறு மன்சுக் மாண்டவிய கடிதம் எழுதிய நிலையில், காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. 

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ஒற்றுமை நடைப்பயணத்தை முன்னெடுத்து வருகிறார். தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து ராஜஸ்தானில் தற்போது நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், ஒற்றுமை நடைப்பயணத்தில் கரோனா விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என காங்கிரஸ் கட்சிக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கடிதம் எழுதியுள்ளார். 

இதற்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பல தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜ்ஸ்தான் மாநில முதல்வருமான அசோக் கெலாட் விமர்சித்துள்ளார். 

இரண்டு நாள்களுக்கு முன்பு திரிபுராவில் பிரதமர் நரேந்திர மோடி நடத்திய பேரணியில் கரோனா கட்டுப்பாடுகள் பின்பற்றப்படவில்லை. அதனால், பிரதமருக்குத்தான் மன்சுக் மாண்டவியா கடிதம் எழுத வேண்டும். அமைச்சருக்கு அரசியல் உள்நோக்கம் இல்லையென்றால், முதலில் பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.