ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வந்தே பாரத் ரயிலில் வருகிறது புதிய வசதி!

வந்தே பாரத்-3  ரயிலில்  படுக்கை வசதிகள் உருவாக்கப்பட்டு வருவதாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

News image
கோப்புப்படம்
Updated On :21 டிசம்பர் 2022, 9:52 am

DIN

வந்தே பாரத்-3  ரயிலில்  படுக்கை வசதிகள் உருவாக்கப்பட்டு வருவதாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

1950 மற்றும் 1960-களில் வடிவமைக்கப்பட்ட பழைய மின்சார ரயில்களுக்குப் பதிலாக வந்தே மெட்ரோ ரயில்களை இந்திய ரயில்வே தயாரித்து வருவதாக மத்திய ரயில்வே மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

"இந்த வந்தே மெட்ரோ ரயில்கள் அதிக எண்ணிக்கையில் தயாரிக்கப்படும். நாடு முழுவதும், 1950 மற்றும் 1960-களின் வடிவமைப்புகளில் இருந்த ரயில்கள் அனைத்தும் மாற்றப்படும்." என்று அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

வந்தே பாரத் ரயில்களைப் போலவே வந்தே மெட்ரோவும் இந்திய பொறியாளர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று வைஷ்ணவ் கூறினார்.

ரயிலின் வடிவமைப்பு மே-ஜூன் 2023-க்குள் முடிக்கப்படும். மேலும் முழுமையாக கட்டமைக்கப்பட்ட மற்றும் வடிவமைக்கப்பட்ட முதல் ஹைட்ரஜன் ரயில் 2023 இல் வெளியிடப்படும் என்று அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

வந்தே பாரத்-3  ரயில்  உருவாக்கும் பணியில் இந்திய ரயில்வே செயல்பட்டு வருகிறது.  இதில் படுக்கை வசதிகள் கொண்ட ரயில்கள் உருவாக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.