திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கூட்டத்தொடர் நிறைவு: மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற மக்களவை கூட்டத்தொடர் முன்கூட்டியே நிறைவு பெற்றது. 

News image
Updated On :23 டிசம்பர் 2022, 6:14 am

நாடாளுமன்ற மக்களவை கூட்டத்தொடர் முன்கூட்டியே நிறைவு பெற்றது. 

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் 7 ஆம் தேதி தொடங்கிய நிலையில் டிசம்பர் 29 ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. 

இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகை வருவதால் கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிக்க வேண்டும் என எம்.பி.க்கள் பலரும் கோரிக்கை வைத்திருந்தனர். 

இதையடுத்து, திட்டமிட்டதைவிட ஒரு வாரம் முன்னதாகவே இன்று (டிச.23) மக்கலவையை அவைத் தலைவர் ஓம் பிர்லா தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

எம்.பி.க்களின் கோரிக்கையினாலும் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியாலும் கூட்டத்தொடர் முன்கூட்டியே ஒத்திவைக்கப்படுவதாக ஓம் பிர்லா தெரிவித்தார். 

முன்னதாக, நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரை டிசம்பர் 23-ஆம் தேதி முடிக்க மக்களவையின் வணிக ஆலோசனைக் குழு (பிஏசி) கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.