இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

எம்எல்ஏ குடியிருப்பில் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை!

மத்திய பிரதேச சட்டப்பேரவை உறுப்பினரின் அதிகாரப்பூர்வ குடியிருப்பில் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :26 டிசம்பர் 2022, 12:43 pm IST

மத்திய பிரதேச சட்டப்பேரவை உறுப்பினரின் அதிகாரப்பூர்வ குடியிருப்பில் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போபாலில் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ஓம்கார் சிங் மார்கமின் அதிகாரப்பூர்வ குடியிருப்பு உள்ளது. இதில், கடந்த 4 ஆண்டுகளாக தீரத் சிங் என்ற கல்லூரி மாணவர் தங்கி படித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை தீரத் சிங் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் மாணவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

மாணவர் தற்கொலை செய்து கொண்ட அறையில் தற்கொலைக் குறிப்பையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அதில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் தற்கொலை செய்து கொள்வதாக மாணவர் குறிப்பிடப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், மாணவரின் பெற்றோரும் அவர் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்ததை உறுதி செய்துள்ளனர். மேலும், மாணவரின் தற்கொலைக்கான காரணங்கள் குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்படும் என்றார்.

சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஓம்கார் சிங் அதிகாரப்பூர்வ குடியிருப்பில் மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.