நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

துனிஷா தற்கொலையில் 'லவ் ஜிகாத்'? பாஜக குற்றச்சாட்டும் காவல் துறை பதிலும்!

நடிகை துனிஷா தற்கொலைக்கு கட்டாய மதமாற்றமே (லவ் ஜிகாத்) காரணம் என்ற பாஜக தலைவர் கிரீஷ் மகாஜன் குற்றச்சாட்டுக்கு மகாராஷ்டிர காவல் துறை பதிலளித்துள்ளது. 

News image

துனிஷா சர்மா , ஷீசன் கான்

Updated On :1 பிப்ரவரி 2024, 4:42 pm IST


நடிகை துனிஷா தற்கொலைக்கு கட்டாய மதமாற்றமே (லவ் ஜிகாத்) காரணம் என்ற பாஜக தலைவர் கிரீஷ் மகாஜன் குற்றச்சாட்டுக்கு மகாராஷ்டிர காவல் துறை பதிலளித்துள்ளது. 

மகாராஷ்டிரத்தில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் நடித்து வருபவர் துனிஷா சர்மா. இவர் தனது சக நடிகர் ஷீசனை காதலித்து வந்துள்ளார். ஆனால் கடந்த சில நாள்களுக்கு முன்பு, காதலை முறித்துக்கொள்வதாக ஷீசன் தெரிவித்துள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு நடிகை துனிஷா ஆளாகியுள்ளார். 

‘அலி பாபா: தஸ்தான்-இ-காபூல்’ என்ற தொலைக்காட்சி தொடரின் படப்பிடிப்பு மும்பையின் வசாய் பகுதியில் நடைபெற்று வந்தது. அப்போது படப்பிடிப்பின்போது கழிவறையில் துனிஷா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். 

இதனைத் தொடர்ந்து துனிஷாவின் தாயார் அளித்த புகாரின் பேரில் காதலன் ஷீசனை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணையின்போது தில்லியைச் சேர்ந்த கால் சென்டர் ஊழியரான ஷ்ரத்தா வால்கர், காதலன் அஃபாதாப்பால், வெட்டிக் கொலை செய்யப்பட்டு, உடலை உடலை 33 துண்டுகளாக்கி வீசியெறிந்த சம்பவம் தன்னை மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கியதாக வாக்கு மூலம் அளித்துள்ளார். 

தில்லியில் காதலனால் நடந்த இந்த கொடூரக் கொலையின் பின்னணியில் மதமாற்றம் இருப்பதாக, பல தலைவர்கள் குற்றம் சாட்டினர். அதாவது முஸ்லீம் ஆண்கள் ஹிந்து பெண்களை திருமணம் செய்துகொண்டு, கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவதாக ஷ்ரத்தா கொலை வழக்கு தொடர்பாக சில தலைவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். 

லவ் ஜிகாத் என குற்றச்சாட்டு

இதனால் மனமுடைந்த ஷீசன், துனிஷா உடனான காதலை முறித்துக்கொண்டுள்ளார். இருவரும் வேறு வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்த முடிவை எடுத்ததாக காவல் துறை விசாரணையில் ஷீசன் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், நடிகை துனிஷா கொலை வழக்கின் பின்னணியில் லவ் ஜிகாத் முக்கிய காரணமாக இருக்கலாம் என பாஜக மாநில தலைவர் கிரீஷ் மகாஜன் தெரிவித்துள்ளார். மேலும், பாஜகவைச் சேர்ந்த பலர், துனிஷா தற்கொலையை கட்டாய மத மாற்றத்துடன் தொடர்புபடுத்தி கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 

இந்நிலையில், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் காவல் துறை துணை காவல் கண்காணிப்பாளர் சந்திரகாந்த் ஜாதவ் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். துனிஷா தற்கொலை வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது. இருவரின் செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் வேறு பெண்களுடன் தொடர்பு, மிரட்டல், லவ் ஜிகாத் என எந்த குற்றச்சாட்டுக்கான அறிகுறிகளும் தென்படவில்லை என விளக்கமளித்துள்ளார்.

காதலன் வாக்குமூலம்

துனிஷா இறப்பதற்கு சில நாள்கள் முன்புகூட தற்கொலைக்கு முயன்றாள். ஆனால் அப்போது நான் உடன் இருந்ததால், அவளைக் காப்பாற்றினேன். துனிஷாவின் தாயாரிடமும் இது தொடர்பாக கூறி கவனித்துக்கொள்ள வேண்டினேன் என காவல் துறை வாக்குமூலத்தில் ஷீசன் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.