மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

இந்தியா வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக தொடரும்: டாட குழுமத் தலைவர் சந்திரசேகரன் கணிப்பு

இந்தியா வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக தொடரும் என்று டாடா குழுமத்தின் தலைவர் நடராஜன் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். 

Published On :


புதுதில்லி: இந்தியா வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக தொடரும் என்று டாடா குழுமத்தின் தலைவர் நடராஜன் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். 

டாடா குழுமத்தின் 9.35 லட்சம் ஊழியர்களுக்கு அவர் விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: 

ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வரும் எரிபொருள் நெருக்கடியால் பொருளாதார மந்தநிலையைத் தவிர்க்க பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான போராட்டம், தற்போது புவிசார் அரசியில் சூழல் ஆகியவற்றுக்கு இடையே, அதிகரித்து வரும் நுகர்வு, நுகர்வோர் நம்பிக்கை மற்றும் முதலீடுகள் ஆகியவை இந்தியாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளன.

மேலும், அடுத்த ஆண்டு முதல் பணவீக்கம் படிப்படியாகக் குறைவதைக் காண முடியும். இந்தியா வலுவான நிலையில் உள்ளது. நாட்டின் வேகமான வளர்ச்சி அடுத்த ஆண்டும் தொடரும். 

உலகளாவிய வளர்ச்சி குறைவு பாதிப்பை ஏற்படுத்தலாம். ஆனால், உலகளாவிய உற்பத்தியில் நம் நாட்டின் பங்கு உயரும்போது, அது பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் என்றும் தெரிவித்துள்ளார். 

கரோனா தொற்று நோய்களின் பரவல் மற்றும் உலகளாவிய பொருளாதார நெருக்கடி காரணமாக பொருளாதார வளர்ச்சி 2000-களில் இருந்ததை விட அடுத்து ஆண்டில் பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருக்கலாம் என நம்பிக்கை தெரிவித்தார். 

டாடா குழுமத்தை பொறுத்தவரை, இந்த ஆண்டு நிகழ்வுகளின் ஆண்டாகும். இந்த ஆண்டும் பல அபிவிருத்திகளை நாம் கண்டுள்ளோம். “ஏர் இந்தியா” திரும்பப் பெறப்பட்டது, “டாடா நியு” அறிமுகப்படுத்தப்பட்டது, “டாடா மோட்டார்ஸ்” பயணிகள் வாகனங்களின் விற்பனை ஓராண்டில் 5 லட்சத்தைத் தாண்டியது, மின்சார கார்களின் பங்களிப்பு 10 சதவீதம் என அபிவிருத்திகளை கண்டுள்ளோம் என அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.