முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி: ராகுல் காந்தி

நாடாளுமன்றத்தில் புரட்சிகர உரையாற்றிய ராகுல் காந்திக்கு தமிழக மக்கள் சார்பாக நன்றி எனத் தெரிவித்த முதல்வர் ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி தன் நன்றியைத் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி
ராகுல் காந்தி

நாடாளுமன்றத்தில் புரட்சிகர உரையாற்றிய ராகுல் காந்திக்கு தமிழக மக்கள் சார்பாக நன்றி எனத் தெரிவித்த முதல்வர் ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி தன் நன்றியைத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், இளைஞர்களுக்கு வேலையின்மை, வெளியுறவு கொள்கை தோல்வி உள்ளிட்டவை குறித்து பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தமிழகத்தை பாஜகவால் ஒருபோது ஆட்சி செய்ய முடியாது எனவும் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து இன்று (பிப்.3), திமுக தலைவரும்  தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பக்கத்தில் ,

’இந்திய நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நின்றுகொண்டு தமிழ்நாட்டின் தனிச்சிறப்பை, இந்த இனத்தின் பெருமையை மிகச் சிறந்த சொற்களால் இந்திய நாட்டுக்கே அறிவித்த ஆருயிர்ச் சகோதரர் ராகுல் காந்தி அவர்களுக்குத் தமிழ்நாட்டு மக்களின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தனித்தன்மையும் பண்பாடும் அறநெறியும் கொண்ட தமிழ்ப்புலத்தின் பெருமையை அகில இந்தியத் தலைவர்கள் உணரவில்லையே என்றுதான் தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் முத்தமிழறிஞர் கலைஞரும் வருந்தினார்கள். அக்கவலையைப் போக்கும் வகையில் ராகுல் காந்தி பேச்சு அமைந்துள்ளது.

இந்தியத் துணைக்கண்டம் முழுமைக்கும் தமிழ்நெறி செல்லட்டும். சகோதரர் ராகுல் காந்தியின் உரத்த சிந்தனைக்கு உணர்வுப்பூர்வமான நன்றிகள்.” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் , அப்பதிவைப் பகிர்ந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,’ நாட்டின் எல்லா மாநில மக்களைப் போல தமிழர்களும் என் சகோதர, சகோதரிகளே. இந்தியாவின் பன்மைத்துவ, கூட்டாட்சி மற்றும் கூட்டுறவு சிந்தனையில் நம் நம்பிக்கை வெற்றி பெறும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. உங்களின் கனிவான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி திரு ஸ்டாலின் அவர்களே’ எனத் தன் நன்றியை தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com