ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கொழும்பு குடியேற்றத் தடுப்புக்காவல் மையத்துக்கு மாற்றப்படும் 56 இந்திய மீனவர்கள்

இன்று குடியேற்றத் தடுப்புக்காவல் மையத்துக்கு மாற்றப்படவிருப்பதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News image
கொழும்பு குடியற்றேத் தடுப்புக்காவல் மையத்துக்கு மாற்றப்படும் 56 இந்திய மீனவர்கள்
Updated On :1 பிப்ரவரி 2024, 8:20 am

PTI

இலங்கை கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்யப்பட்ட தமிழக மீனவா்கள் 56 பேரை விடுவிப்பதற்கு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, இன்று குடியேற்றத் தடுப்புக் காவல் மையத்துக்கு மாற்றப்படவிருப்பதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிறைத் துறை அதிகாரிகள் இது குறித்துக் கூறுகையில், ஜனவரி 25ஆம் தேதி அவர்களை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர்கள் சிறைத்துறையால் நடத்தப்படும் கரோனா தனிமைப்படுத்தும் மையத்துக்கு மாற்றப்பட்டனர்.

அவர்களில் சிலருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர்களது தனிமைப்படுத்தும் காலம் இன்று நிறைவு பெறுகிறது. இதையடுத்து, அவர்கள் இன்று கொழும்புவியில் உள்ள குடியேற்ற தடுப்புக் காவல் மையத்துக்கு மாற்றப்படுகிறார்கள்.

மன்னாா் வளைகுடா பகுதியில் கடந்த டிசம்பர்மாதம் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவா்களை இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்தது. அவா்களை விடுவிக்குமாறு இந்திய அரசு கோரிக்கை விடுத்தது. குறிப்பாக, நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு இந்திய அரசு ஜனவரி மாதத் தொடக்கத்தில் நிதியுதவி அறிவித்தது. இதுதொடா்பாக, இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், இலங்கை நிதியமைச்சா் பசில் ராஜபட்ச இடையே நடந்த பேச்சுவாா்த்தையின்போது, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவா்களை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

முன்னதாக, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவா்களை விரைவில் விடுவிக்க வேண்டும் என்றும் டிசம்பர் மாதம் இந்தியா கோரிக்கை விடுத்தது.

இந்நிலையில், இந்திய மீனவா்கள் கைதான விவகாரத்தை வடக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள நீதிமன்றம் ஜனவரி மாதம் விசாரித்தது. அதைத் தொடா்ந்து, அவா்கள் 56 பேரை விடுவிக்குமாறு அந்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இவர்கள் விரைவில் தமிழகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.