டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

'அரசு கோரிக்கையின்படியே பேரவை முடக்கம்':மு.க.ஸ்டாலினுக்கு மேற்கு வங்க ஆளுநர் விளக்கம்

அரசின் கோரிக்கையின்படியே சட்டப்பேரவை முடக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மேற்கு வங்க மாநில ஆளுநர் ஜெகதீப் தன்கர் விளக்கம் அளித்துள்ளார். 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:23 am

DIN

அரசின் கோரிக்கையின்படியே சட்டப்பேரவை முடக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மேற்கு வங்க மாநில ஆளுநர் ஜெகதீப் தன்கர் விளக்கம் அளித்துள்ளார். 

மேற்கு வங்க சட்டப்பேரவையை முடக்க ஆளுநருக்கு எந்தவித அதிகாரம் இல்லை என்று ஜக்தீப் தன்கரின் செயலைக் கண்டித்து மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சுட்டுரையில் பதிவிட்டிருந்தார். அதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் தன்கர் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.

மேற்கு வங்க சட்டப்பேரவையை பிப்ரவரி 12 முதல் முடக்கி வைக்க ஆளுநர் ஜக்தீப் தன்கர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். 

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் சுட்டுரையில் பதிவிட்டிருந்ததாவது, மேற்கு வங்க சட்டமன்றத்தை ஆளுநர் முடக்கிய செயல், விதிமுறைகள் மற்றும் மரபுகளுக்கு எதிரானது. சட்டப்பேரவையை முடக்க ஆளுநருக்கு எந்தவித அதிகாரம் இல்லை. இது ஏற்கெனவே நிலைநிலைநிறுத்தப்பட்டுள்ள வழக்கத்திற்கு எதிரானது.

மாநில அரசின் தலைவராக கருதப்படுபடுபவர் அரசியலமைப்பை நிலைநாட்டுவதில் முன்மாதிரியாக திகழ வேண்டும். ஜனநாயகத்தின் அழகே ஒருவருக்கொருவர் மதிப்பு அளிப்பதுதான் என்று பதிவிட்டிருந்தார். 

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆளுநர் ஜெகதீப் தன்கர் சுட்டுரையில் பதிவிட்டிருந்ததாவது, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் கடுமையான கருத்துகளில் உண்மை இல்லை. அரசின் கோரிக்கையை ஏற்றே சட்டப்பேரவை முடித்து வைக்கப்பட்டது என்று அவர் விளக்கம் கொடுத்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.