92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தாமரையில்தான் லட்சுமி வீட்டுக்கு வரும்: ராஜ்நாத் சிங்

லட்சுமி தாமரையில் அமர்ந்துதான் வீட்டுக்கு வரும் என மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டார்.

News image

கோப்புப்படம்

Updated On :20 பிப்ரவரி 2022, 4:37 pm

DIN


லட்சுமி தாமரையில் அமர்ந்துதான் வீட்டுக்கு வரும் என மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டார்.

உத்தரப் பிரதேசத்தில் அமேதி அருகே பிரசாரம் மேற்கொண்ட அவர் பேசுகையில், "லட்சுமி தெய்வம் யார் வீட்டுக்கும் சைக்கிளிலோ, யானையிலோ அல்லது யாராவது கையிலோ அமர்ந்து வராது. தாமரையில் அமர்ந்துதான் வரும்" என்றார்.

மேலும், லட்சுமி வருகையின் அறிகுறிதான் பிரதமரின் திட்டங்கள் எனவும் அவர் விளக்கமளித்தார்.

உத்தரப் பிரதேசத்தில் சமாஜவாதி கட்சியின் சின்னம் சைக்கிள், பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னம் யானை மற்றும் காங்கிரஸ் கட்சியின் சின்னம் கை. இவற்றைக் குறிப்பிட்டே ராஜ்நாத் சிங் பிரசாரத்தை மேற்கொண்டிருக்கிறார்.

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதலிரண்டு கட்ட வாக்குப்பதிவு ஏற்கெனவே நிறைவடைந்த நிலையில், மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு இன்று நடைபெற்றது.

அமேதியில் பிப்ரவரி 27-ம் தேதி 5-வது கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.