வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

ஒமைக்ரான் காரணமாக இந்தியாவில் முதல் பலி

ஒமைக்ரான் காரணமாக இந்தியாவில் முதல் உயிரிழப்பு

News image

கோப்புப்படம்

Updated On :5 ஜனவரி 2022, 10:27 am

DIN

ராஜஸ்தானில் ஒமைக்ரான் காரணமாக ஒருவர் மரணம் அடைந்துள்ளார். இந்தியாவில் ஒமைக்ரான் காரணமாக ஒருவர் உயிரிழப்பு இதுவே முதல்முறை. 73 வயதான லட்சுமிநாராயணன் நாகருக்கு கரோனா இருப்பது கடந்த டிசம்பர் 15ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது.

அன்றிலிருந்து இன்று வரை, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். அதேபோல், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் என இணை நோய்களால் அவர் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

கடந்த டிசம்பர் 21ஆம் தேதி, நாகருக்கு கரோனா பரிசோதனையில் நெகட்டிவ் வந்ததையடுத்து, அவரின் மாதிரிகள் மரபணு வரிசைமுறைக்காக அனுப்பப்பட்டது. டிசம்பர் 25ஆம் தேதி வெளியான மரபணு முடிவுகளில், அவருக்கு ஒமைக்ரான் இருப்பது கண்டறியப்பட்டது.

இந்நிலையில், ஆறு நாள்கள் கழித்து, கடந்த டிசம்பர் 31ஆம் தேதி, அவர் மரணம் அடைந்தார். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், அவர் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளார். பயணம் எங்கும் செய்யவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.