விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கேரளத்தில் முழு ஊரடங்கா? சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்

தற்போதைய சூழலில் முழு ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் இல்லை என கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

News image

கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ்

Updated On :8 ஜனவரி 2022, 2:07 pm

DIN

தற்போதைய சூழலில் முழு ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் இல்லை என கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பகுதி நேர ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு உள்ளிட்டவை அமல்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கரோனா தொற்று அதிகரித்துவருவதன் மத்தியில் கேரளத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் தற்போது ஏதும் இல்லை என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

முழு ஊரடங்கை அறிவிப்பது மக்களின் வாழ்வாதாரத்தை பாதிப்படையச் செய்யும் என தெரிவித்த அமைச்சர் வீனா ஜார்ஜ் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.

வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி தனிமைப்படுத்தப்படுவதாக வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். கேரளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5000க்கும் மேற்பட்டவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.