நாட்டில் ஒமைக்ரான் பாதிப்பு 4,461 ஆக உயா்வு

நாட்டில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 4,461-ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

நாட்டில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 4,461-ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புதியவகை ஒமைக்ரான் தொற்று 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பரவியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் ஒமைக்ரானால் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 1247 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து இரண்டாவதாக ராஜஸ்தான் 645 பேர், அதைத்தொடர்ந்து தில்லி 546 பேர், கர்நாடகம் 479 பேர், கேரளம் 350 பேர், உ.பி. 275 பேர், குஜராத் மற்றும் தமிழ்நாட்டில் 236 மற்றும் 185 பேருக்கும், தெலங்கானா 123 பேர், ஹரியானா 123 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கோவா, மணிப்பூர், சட்டிஸ்கர், ஹிமாச்சல் பிரதேசம் தலா ஒருவருக்கு ஒமைக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com