நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பெங்களூருவில் அபாய நிலையில் 412 கட்டுப்பாட்டு பகுதிகள்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 412 கட்டுப்பாட்டு பகுதிகள் தொற்று அதிகம் பரவும் அபாயகரமான நிலையில் உள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.

News image

பெங்களூருவில் 412 கட்டுப்பாட்டு பகுதிகள்

Updated On :11 ஜனவரி 2022, 10:43 am

DIN


கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 412 கட்டுப்பாட்டு பகுதிகள் தொற்று அதிகம் பரவும் அபாயகரமான நிலையில் உள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.

பெங்களூருவில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிக்ரித்து வருகிறது. இதன் விளைவாக கட்டுப்பாட்டு பகுதிகளில் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கரோனாவைக் கட்டுப்படுத்த தடுப்பூசி முகாம்களின் எண்ணிக்கையை அதிகரித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
 
தற்போது 412 பகுதிகளில் கரோனா தொற்று அதிகம் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பெங்களூரு மாநகராட்சி அறிவித்துள்ளது. 

அதிகபட்சமாக மஹாதேவபூர் பகுதியில் 143 பகுதிகளுக்கு மாநகராட்சி சார்பில் சீல் வைக்கப்பட்டுள்ளன. அதற்கு அடுத்தபடியாக பொம்மனஹள்ளி பகுதியில் 100 இடங்களும், தெற்கு பெங்களூருவில் 49 இடங்களும், மேற்கு பெங்களூருவில் 44 இடங்களும், கிழக்கு பெங்களூரு 33 இடங்களும், யெலஹங்கா 33 இடங்களும் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.