கரோனா பரவல் காரணமாக மத்தியப் பிரதேசத்தில் நாளை(ஜன.15) முதல் ஜன.31 வரை பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பதாக மாநில முதலவர் சிவராஜ் சிங் சௌகான் தெரிவித்துள்ளார்.
நாட்டில் அதிகரிக்கும் கரோனா தொற்றால் பல மாநிலங்களும் கட்டுப்பாட்டை அதிகரித்து வரும் நிலையில் மத்தியப் பிரதேசத்தில் நாளை முதல் ஜனவரி.31 ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பதாகவும் அரசியல் கூட்டங்கள், பொது நிகழ்ச்சிகளுக்கு தடை விதிப்பதாகவும் அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் அறிவித்துள்ளார்.