கோவா தேர்தலில் போட்டியிடும் ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளராக அமித் பலேகர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு பிப்ரவரி 10ஆம் தேதி முதல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளன. இதில், கோவா மாநிலத்திற்கான வாக்குப் பதிவு ஒரே கட்டமாக பிப்ரவரி 14இல் நடைபெறுகிறது.
இந்த தேர்தலில், கோவா மாநிலத்தை பொறுத்தவரை பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணமூல் காங்கிரஸ் என பலமுனைப் போட்டிகள் நிலவுகிறது.
இந்நிலையில், ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளராக வழக்கறிஞர் அமித் பலேகரை அறிவித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை அறிவித்துள்ளார்.
மேலும், கோவா சட்டப்பேரவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி தனித்து போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.