எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

கரோனா மூன்றாம் அலையில் கேரளம்: மாநில சுகாதாரத் துறை அமைச்சர்

கேரளம் கரோனா மூன்றாம் அலையை எதிர்கொண்டு வருவதால், அடுத்த மூன்று வாரங்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :19 ஜனவரி 2022, 1:06 pm

DIN


கேரளம் கரோனா மூன்றாம் அலையை எதிர்கொண்டு வருவதால், அடுத்த மூன்று வாரங்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மேலும் கூறியதாவது:

"முதலிரண்டு கரோனா அலைகளுக்கு மாறாக மூன்றாம் அலையில், தொடக்கத்திலேயே நோய் தீவிரமாகப் பரவுகிறது. இரண்டாம் அளையில் பரவல் விகிதம் 2.68 சதவிகிதம். தற்போது 3.12 சதவிகிதம். எனவே, அடுத்த மூன்று வாரங்கள் கேரளத்துக்கு மிக முக்கியமானது.

இதன் தீவிரத்தன்மை குறைவாக இருந்தாலும், டெல்டா வகையைக் காட்டிலும் ஒமைக்ரான் வகை பரவல் 5 முதல் 6 மடங்கு கூடுதலாக உள்ளது. அதை எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

பெருந்தொற்றைக் கட்டுப்பாடிலேயே வைத்திருக்க அனைவரும் கரோனா வழிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். நோய்த் தொற்று மற்றும் தடுப்பூசி குறித்து சமூக ஊடகங்களில் பொய் பரப்புரைகளைப் பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். 

ஒமைக்ரான் வகை கரோனா, இயற்கை தடுப்பூசி என்பதால் ஆபத்தானதல்ல என சிலர் பரப்புகின்றனர். இதுபோன்ற பிரசாரங்கள் ஆதாரமற்றது. எந்தவொரு கரோனா வகையாக இருந்தாலும், அதன் அடிப்படை குணாதிசயங்கள் ஒன்றுதான். 

இரண்டாம் அலையில் அதிக பாதிப்புகளுக்குக் காரணம் டெல்டா வகை கரோனா. அது முற்றிலும் நிறைவடைவதற்குள் மூன்றாம் அலை தொடங்கிவிட்டது. தற்போது டெல்டா மற்றும் ஒமைக்ரான் என இரண்டு வகை கரோனாவும் பாதிப்புகளை அதிகரிக்கின்றன.

இரண்டாம் அலையைக் காட்டிலும் 5 சதவிகிதம் கூடுதல் பாதிப்பு எண்ணிக்கைகளை மூன்றாம் அலையில் எதிர்பார்க்கலாம்" என்றார் அமைச்சர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.