நடுவானில் விமானத்தில் புகை: மீண்டும் தில்லி திரும்பிய ஸ்பைஸ்ஜெட்!

நடுவானில் பறந்தபோது விமானத்தின் கேபினில் இருந்து புகை வந்தததால் ஜபல்பூர் செல்லவிருந்த விமானம் மீண்டும் தில்லி திரும்பியது. 
நடுவானில் விமானத்தில் புகை: மீண்டும் தில்லி திரும்பிய ஸ்பைஸ்ஜெட்!

நடுவானில் பறந்தபோது விமானத்தின் கேபினில் இருந்து புகை வந்தததால் ஜபல்பூர் செல்லவிருந்த விமானம் மீண்டும் தில்லி திரும்பியது. 

தில்லியில் இருந்து ஜபல்பூர் செல்லவிருந்த ஸ்பைஸ்ஜெட் விமானம்( SG-2962) இன்று காலை தில்லியில் இருந்து புறப்பட்டுச் சென்றது. சுமார் 5,000 அடி உயரத்தில் நடுவானில் பறந்தபோது விமானத்தின் கேபினில் இருந்து புகை வந்துள்ளது. 

இதையடுத்து விமானம் மீண்டும் தில்லி சென்று பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டு பயணிகள் வெளியேற்றப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக இதை உயிர்ச்சேதம் ஏதும் நிகழவில்லை. இதனால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com