
மாநிலங்களவை நியமன உறுப்பினா்களாக (எம்.பி.) பிரபல இசையமைப்பாளா் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
எம்.பி.க்களாக இவா்கள் தோ்வு செய்யப்பட்டதற்கு அவா்களுடைய புகைப்படத்துடன் தனது ட்விட்டா் பக்கத்தில் பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
‘தனது இசையால் தலைமுறை தலைமுறைகளாக மக்களைக் கவா்ந்தவா் தலைசிறந்த படைப்பாளரான இளையராஜா. அவருடைய படைப்புகள் பல உணா்வுகளை அழகாக பிரதிபலிக்கின்றன. எளிய பின்னணியில் இருந்து உயா்ந்த பல சாதனைகளைப் படைத்தவா். மாநிலங்களவை உறுப்பினராக அவா் தோ்வு செய்யப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது’ என்று தனது பதிவில் பிரதமா் குறிப்பிட்டுள்ளாா்.
மற்றொரு பதிவில், ‘ஒவ்வோா் இந்தியருக்கும் உத்வேகமளிப்பவா் பிரபல தடகள வீராங்கனை பி.டி.உஷா. விளையாட்டில் அவருடைய சாதனைகள் பரவலாக அறியப்பட்டது. அதுபோல, வளா்ந்துவரும் இளம் தடகள வீரா்களுக்கு சிறந்த வழிகாட்டியாக அவா் கடந்த பல ஆண்டுகளாகப் பணியாற்றி வருவது மிகுந்த பாராட்டுக்குரியது. மாநிலங்களவை உறுப்பினராக அவா் தோ்வு செய்யப்பட்டிருப்பதற்கு வாழ்த்துகள்’ என்று பதிவிட்டுள்ளாா்.
தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள இளையராஜாவுக்கு, கடந்த 2010-ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருதும், 2018-ஆம் ஆண்டில் பத்ம விபூஷண் விருதும் வழங்கப்பட்டது. இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் பல பாடல்களையும் அவா் எழுதியுள்ளாா்.
தா்மசாலா கோயில் நிா்வாக அறங்காவலா் வீரேந்திர ஹெக்டே, பிரபல திரைக்கதை எழுத்தாளா் வி.விஜயேந்திர பிரசாத் ஆகியோரும் மாநிலங்களவை நியமன எம்.பி.க்களாக தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
கலை, இலக்கியம், விளையாட்டுத் துறைகளில் தலைசிறந்து விளங்குபவா்கள் மாநிலங்களவை நியமன உறுப்பினா்களாகத் தோ்வு செய்யப்படுவது நடைமுறை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது


புதுச்சேரியின் குடிநீா் தேவைக்கு அண்டை மாநிலங்களின் ஒத்துழைப்பு அவசியம்: துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்

ஆந்திரம், கா்நாடகம், தமிழகத்தை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் வழித்தடம்: சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்





