அசாமின் காஸிரங்கா தேசிய பூங்காவிற்கு அருகில் பெண் ஒருவர் காண்டாமிருகத்தினால் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் அசாமின் ஹதிகுலி பகுதியில் இன்று(ஜூலை 16) நிகழ்ந்துள்ளது.
இதையும் படிக்க:‘இப்படி ஒரு வெள்ளத்தைப் பார்த்ததில்லை’: அசாம் முதல்வர்
காண்டாமிருகத்தினால் தாக்கப்பட்ட அந்த பெண்ணின் பெயர் பிரியா சௌரா என்பது தெரியவந்துள்ளது. அவர் தற்போது அசாமின் பொகோஹாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையும் படிக்க:அச்சுறுத்தும் சக்திகளிடம் எச்சரிக்கை தேவை: வெங்கைய நாயுடு
இது குறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: “ காண்டாமிருகத்தினால் தாக்கப்பட்ட பெண் ஹதிகுலி பகுதியைச் சேர்ந்தவர். அவர் தாக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.” என்றார்.