கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் அசாம் மாநிலம் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வசர்மா தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களாக பெய்துவரும் கனமழை காரணமாக அசாம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம் சூழந்துள்ளது.
இந்நிலையில் வெள்ளப்பெருக்கு காரணமாக அசாமில் இதுவரை இல்லாத பாதிப்பு பதிவாகியுள்ளதாக அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வசர்மா தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | பஞ்சாபில் மகாத்மா காந்தியின் சிலை உடைப்பு
இதுதொடர்பாக செய்தியாளர்களை சனிக்கிழமை சந்தித்த அவர், “அசாமில் இப்படியொரு வெள்ளத்தை இதுவரை நான் பார்த்ததில்லை. மக்கள் இதுவரை இல்லாத அளவு மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் மழை வெள்ள பாதிப்பை சந்தித்துள்ளனர். 54, 837 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 7 லட்சத்து 42 ஆயிரம் பேர் வெள்ள பாதிப்பு தடுப்பு முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அசாமில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 19 பேர் உள்பட இதுவரை 195 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 37 பேர் காணாமல் போயுள்ளனர். மாநிலம் முழுவதும் 2.40 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வேலை செய்த வீட்டில் பணம் திருட்டு: பெண் கைது
ஈரோடு கிழக்குத் தொகுதியில் வெற்றியை தக்கவைக்க தவறிய காங்கிரஸ்

பெருந்துறையில் 2-ஆவது முறையாக வாகைசூடிய அதிமுக வேட்பாளா்

யுபிஐ: ஏப்ரலில் 2,235 கோடி பரிவா்த்தனைகள்!
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


