நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வருமான வரிக் கணக்குத் தாக்கல் அதிகரிப்பு

கடந்த நிதியாண்டைக் காட்டிலும் 2022ஆம் நிதியாண்டில், வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக மத்திய நேரடி வரிகள் வாரிய (சிபிடிடி) தலைவர் சங்கீதா சிங் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :11 ஜூன் 2022, 12:25 pm

PTI


பனாஜி:  கடந்த நிதியாண்டைக் காட்டிலும் 2022ஆம் நிதியாண்டில், வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக மத்திய நேரடி வரிகள் வாரிய (சிபிடிடி) தலைவர் சங்கீதா சிங் தெரிவித்துள்ளார்.

கடந்த நிதியாண்டில் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்தோர் எண்ணிக்கை 6.9 கோடியாக இருந்த நிலையில், அது தற்போது 7.14 கோடியாக அதிகரித்திருப்பதன் மூலம், வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருப்பதையே காட்டுகிறது என்றார்.

வழக்கமாக, நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்போதுதான், வரி வருவாயும் அதிகரிக்கும். தற்போது வழக்கத்தைக் காட்டிலும் வரி வருவாய் அதிகரித்துள்ளது. இதற்குக் காரணம், அதிகமான விற்பனை என்றும் அவர் கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.