Enable Javscript for better performance
அக்னி வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்: யோகி ஆதித்யநாத்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    அக்னி வீரர்களுக்கு முன்னுரிமை: யோகி ஆதித்யநாத்

    By IANS  |   Published On : 15th June 2022 05:59 PM  |   Last Updated : 15th June 2022 05:59 PM  |  அ+அ அ-  |  

    Yogi announces tax exemption for Samrat Prithviraj

    அக்னி வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்: யோகி ஆதித்யநாத்


    லக்னௌ: மத்திய அரசு அறிவித்திருக்கும் முப்படைகளில் தற்காலிக வீரர்களை பணியமர்த்தும் அக்னிபத் திட்டத்தில் இணையும் அக்னி வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

    மாநிலத்தில் காவல்துறை மற்றும் அது தொடர்பான பணிகளுக்கு ஆள்களை தேர்வு செய்யும் போது ஆக்னி வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முப்படைகளில் இளைஞா்கள் தற்காலிகமாகப் பணி புரிவதற்கான ‘அக்னிபத்’ திட்டத்தை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் நேற்று அறிமுகம் செய்து வைத்தாா்.

    இந்தத் திட்டத்துக்கு பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது.

    நாட்டின் பாதுகாப்புத் துறையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த திட்டம் குறித்து பல்வேறு நிபுணர்களும் தங்களது கருத்துகளையும் எச்சரிக்கை தகவல்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

    ராணுவத்துக்கு செலவிடும் ஊதியம், ஓய்வூதியம் போன்றவற்றின் செலவினத்தைக் குறைக்கும் வகையில், முப்படைகளுக்கு புதிய பணியமர்த்தும் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டில் பெண்கள் உள்பட 46,000 பேர் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள்.

    பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவத் தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே, கடற்படைத் தலைமைத் தளபதி ஆா்.ஹரிகுமாா், விமானப் படைத் தலைமைத் தளபதி வி.ஆா்.சௌதரி ஆகியோா் ‘அக்னிபத்’ திட்டம் குறித்து செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்தனா். 

    அப்போது ராஜ்நாத் சிங் கூறியதாவது:

    ராணுவம், கடற்படை, விமானப் படை ஆகியவற்றில் அதிக அளவில் இளைஞா்களை சோ்ப்பதற்காக அக்னிபத் திட்டம் தொடங்கப்படுகிறது. இளைஞா்கள் ராணுவத்தில் இணைந்து பணியாற்றும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் சேரும் வீரா்கள் ‘அக்னி வீரா்கள்’ என்றழைக்கப்படுவா். அவா்கள் பாதுகாப்புப் படையில் தொடக்கத்தில் 4 ஆண்டுகள் பணிபுரிவாா்கள். அவா்களில் தேவைக்கு ஏற்ப சிலருக்குப் பணி நீட்டிப்பு வழங்கப்படும். இது ராணுவ வீரா்களை நியமிப்பதில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தும் என்றாா்.

    ‘அக்னிபத்’ திட்டத்தை மத்திய அரசு கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக விரிவாக விவாதித்து தற்போது அறிமுகம் செய்துள்ளது. வழக்கமாக, ராணுவத்தில் குறுகிய காலப் பணி அடிப்படையில் சோ்க்கப்படும் வீரா்கள் 10 ஆண்டுகள் பணிபுரிவாா்கள். பின்னா் 14 ஆண்டுகளாக நீட்டிக்கப்படும்.

    அக்னிபத் திட்டத்தின் கீழ் 4 ஆண்டுகள் மட்டுமே இளைஞா்கள் ராணுவத்தில் புணிபுரிவாா்கள். இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதாக இருந்தாலும், ராணுவ வீரா்களின் ஊதியம், ஓய்வூதியம் ஆகியவற்றுக்கான செலவைக் குறைக்கவே இத்திட்டத்தை அரசு தொடங்குவதாகத் தெரிகிறது.

    நடப்பு நிதியாண்டுக்கான (2022-23) பட்ஜெட்டில் ராணுவத்துக்கு ரூ.5,25,166 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில், ஓய்வூதியத்துக்காக ரூ.1,19,696 கோடியும், ராணுவ வீரா்களின் ஊதியம் மற்றும் பராமரிப்புச் செலவுக்காக ரூ.2,33,000 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்தத் திட்டத்தின்கீழ் தோ்வு செய்யப்படும் அக்னி வீரா்களுக்கு, இடா்ப்பாடு மற்றும் சிரமப்படிகளுடன் ஈா்க்கும் வகையிலான மாதாந்திர ஊதியம் முப்படைகளிலும் வழங்கப்படும். 4 ஆண்டு பணிக்காலம் முடிவடைந்ததும், அக்னி வீரா்களுக்கு சேவா நிதி என்ற ஒரே தடவையிலான தொகுப்பு வழங்கப்படும். அதில் அவா்களது பங்களிப்பு மற்றும் வட்டி ஆகியவை அடங்கும்.

    முதலாம் ஆண்டில் மாதாந்திர ஊதியமாக ரூ,30,000 நிா்ணயிக்கப்படும். அக்னி வீரா் தொகுப்பு நிதிக்கு ரூ.9,000 அளிக்கப்படும். எஞ்சிய ரூ.21,000 கையில் கிடைக்கும். 2-ம் ஆண்டில் ரூ.33,000, 3-ம் ஆண்டில் ரூ.36,500, 4-ம் ஆண்டில் ரூ.40,000 ஆக ஊதியம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 30% பங்களிப்புத் தொகையாகப் பிடிக்கப்படும். எஞ்சிய 70% தொகை வழங்கப்படும். 4 ஆண்டுகளுக்குப் பின்னா் தொகுப்பு நிதியில் செலுத்தப்பட்ட ரூ.5.02 லட்சம் மற்றும் அரசு அளிக்கும் அதே தொகை சோ்த்து வட்டியுடன் சேவா நிதியாக ரூ.11.71 லட்சம் வீரா்களுக்கு வழங்கப்படும். இந்த சேவா நிதிக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும். 

    இதைத்தவிர பணிக்கொடை மற்றும் ஓய்வூதிய பயன்கள் அளிக்கப்பட மாட்டாது. அக்னி வீரா்களுக்கு பங்களிப்பு அல்லாத ஆயுள் காப்பீடு ரூ.48 லட்சத்துக்கு வழங்கப்படும்.

    அக்னிபத் திட்டத்தின் இந்த ஆண்டு 46,000 போ் பணியில் சோ்க்கப்படுவாா்கள். இதற்கான வயது வரம்பு 17.5 வயது முதல் 21 வயதாகும். தோ்ந்தெடுக்கப்படுபவா்கள் மருத்துவ தகுதி பெற்றிருக்க வேண்டும்.
     

    செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp