காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அனைத்து எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களும் தில்லி வர கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்குத் தொடர்புடைய பணமோசடி வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரஸ் பிரமுகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, ஜூன் 23ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. மேலும், 5வது முறையாக நாளை ராகுல் காந்தி ஆஜராகவும் சம்மன் அனுப்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க | எதிர்க்கட்சி குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹ
இந்நிலையில், அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கையை எதிர்த்தும், அக்னிபத் திட்டத்திற்கு எதிராகவும் போராட்டத்தை வலுப்படுத்தும் நோக்கில், அனைத்து மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களை இன்று இரவுக்குள் தில்லி வர கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.