அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

கரோனா அதிகரிப்பு: மாநிலங்களுடன் மத்திய சுகாதாரத் துறை ஆலோசனை

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், மாநில அரசுகளுடன் மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

News image
ராஜேஷ் பூஷண் (கோப்புப் படம்)
Updated On :28 ஜூன் 2022, 10:28 am

DIN

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், மாநில அரசுகளுடன் மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

நாட்டிலுள்ள கரோனா பரவல் மற்றும் தடுப்பூசி பணிகள் குறித்து, கடந்த 23ஆம் தேதி மருத்துவ நிபுணர்களுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து மாநில அரசுகளுடன் மத்திய சுகாதாரத் துறை செயலர் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

மத்திய அமைச்சர் நடத்திய உயர் மட்ட ஆலோசனையின்போது, நாட்டில் கரோனா பரவலைத் தீவிரமாக கண்காணிக்கவும், முதியவர்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவர்கள் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். 

கடந்த இரு வாரங்களாக நாட்டில் கரோனா பரவல் வழக்கத்திற்கு மாறாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரம், கேரளம், கர்நாடகம், உத்தரப் பிரதேசம், தெலங்கானா, ஹரியாணா, தில்லி, தமிழ்நாடு, மேற்கு வங்கம், குஜராத் ஆகிய மாநிலங்களில் கரோனா பரவல் அதிகமாக உள்ளது.

மருத்துவமனையில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோரை கண்காணிக்கவும் அறிவுறுத்திய மத்திய அமைச்சர், பயணங்களை முடித்து வருபவர்களுக்கு கட்டாயம் பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டு, கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.