சகவீரரை சுட்டுக்கொன்று தற்கொலை செய்துகொண்ட ராணுவ வீரர்: காரணம்?

மேற்கு வங்க மாநிலத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர் ஒருவர், சக வீரரை சுட்டுக்கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்


மேற்கு வங்க மாநிலத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர் ஒருவர், சக வீரரை சுட்டுக்கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்திலுள்ள ஜலாங்கி முகாமில் மேற்குவங்கத்தையொட்டிய வங்கதேசம் - இந்தியா எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் தங்கியுள்ளனர்.

அந்த முகாமில் இருவருக்கு உள்ளூர் காவல் நிலையத்திலிருந்து சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இச்சம்பவத்தை அடுத்து அவர்களில் ஒருவர் மற்றொரு வீரரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று பின்னர், தானும் தற்கொலை செய்துகொண்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலம் அமராவதியில் நேற்று எல்லைப் பாதுகாப்புப் படையை சேர்ந்த 5 வீரர்கள் இறந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com