கோவாவில் பெரும்பான்மையைப் பெறுவது உறுதி: ப.சிதம்பரம்

கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையைப் பெறுவோம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 
ப.சிதம்பரம் (கோப்புப் படம்)
ப.சிதம்பரம் (கோப்புப் படம்)
Published on
Updated on
1 min read

கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையைப் பெறுவோம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

கோவா உள்பட உத்தரப் பிரதேசம், மணிப்பூர், பஞ்சாப், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை (மார்ச் 10) நடைபெறவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் அந்தந்த மாநிலங்களில் இந்தியத் தேர்தல் ஆணையம் சார்பில் செய்யப்பட்டுள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதனையொட்டி கட்சித் தலைவர்கள் அந்தந்த மாநிலங்களில் முகாமிட்டுள்ளன. அந்தவகையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கோவாவிற்குச் சென்றுள்ளார். 

அப்போது ஏஎன்ஐ செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்த அவர், கோவாவில் நிச்சயம் பெரும்பான்மை பெறுவோம் என்று கூறிச்சென்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com