உக்ரைனிலிருந்து நேபாளம், பாகிஸ்தானியர்களையும் மீட்கிறது இந்தியா: மத்திய அமைச்சர்

இந்தியர்களை மட்டுமல்லாமல், நேபாளம், வங்கதேசம், பாகிஸ்தானைச் சேர்ந்த குடிமக்களையும் மத்திய அரசு மீட்டு வருவதாக உணவு மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
பியூஷ் கோயல் (கோப்புப் படம்)
பியூஷ் கோயல் (கோப்புப் படம்)

இந்தியர்களை மட்டுமல்லாமல், நேபாளம், வங்கதேசம், பாகிஸ்தானைச் சேர்ந்த குடிமக்களையும் மத்திய அரசு மீட்டு வருவதாக உணவு மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் பேசியதாவது, உக்ரைனில் போர்ப்பதற்றம் மிகுந்த இடத்திலிருந்து, நாடு திரும்ப வேண்டிய இறுதிக் குழுவைச் சேர்ந்த மாணவர்கள் மேற்கு பகுதிக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் உக்ரைனின் அண்டை நாடுகளை அடைவார்கள். அங்கிருந்து அவர்கள் தாயகம் அழைத்துவரப்படுவார்கள்.  

உக்ரைனிலிருந்து தங்கள் நாட்டு குடிமக்களை மீட்பதில் பல்வேறு நாடுகள் திணறுகின்றன. ஆனால் இந்தியா உக்ரைனின் அண்டை நாடுகளின் உதவியுடன் மக்களை மீட்டு வருகிறது. தங்களுடைய செல்லப் பிராணிகளுடன் பலர் தாயகம் திரும்புகின்றனர்.

இந்தியர்களை மட்டுமல்ல, நேபாளம், வங்கதேசம், பாகிஸ்தானைச் சேர்ந்த குடிமக்களையும் மத்திய அரசு மீட்டு வருகிறது. இதுவரை தாயகத்திற்கு அழைத்துவரப்பட்ட 18.5 ஆயிரம் மாணவர்களையும் எங்களது கட்சி பிரமுகர்கள் அவர்களது இல்லங்களில் சென்று சந்தித்துள்ளனர். பல மாணவர்களின் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர் என்று கூறினார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com