கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில், பாஜக 20 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை தொடங்கி நடைபெற்றது. பஞ்சாபில் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில், ஆம் ஆத்மி 92 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடிக்கிறது.
இதையும் படிக்க | பாஜக வரலாறு படைத்துள்ளது: பிரதமர் மோடி
கோவாவில் 40 தொகுதிகளில் பாஜக 20 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 11 இடங்களில் வென்று இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. சுயேச்சை வேட்பாளர்கள் 3 பேர் வெற்றி பெற்றனர். மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி 2 இடங்களிலும், கோவா முன்னணி கட்சி ஒரு இடத்திலும் வென்றுள்ளன.
தேர்தல் ஆணையத்தின்படி, பாஜக 33.31 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது. காங்கிரஸ் 23.46 சதவிகித வாக்குகளும், மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி 7.60 சதவிகித வாக்குகளும், ஆம் ஆத்மி 6.77 சதவிகித வாக்குகளும், திரிணமூல் காங்கிரஸ் 5.21 சதவிகித வாக்குகளும் பெற்றுள்ளன.