முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

காங்கிரஸ் தலைவராகிறாரா முகுல் வாஸ்னிக்?

காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் மாலை கூடவுள்ள நிலையில், கட்சியின் அடுத்த தலைவராக முகுல் வாஸ்னிக் பெயரை ஜி23 தலைவர்கள் பரிந்துரைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

News image

படம்: பேஸ்புக்

Updated On :13 மார்ச் 2022, 3:05 pm IST


காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் மாலை கூடவுள்ள நிலையில், கட்சியின் அடுத்த தலைவராக முகுல் வாஸ்னிக் பெயரை ஜி23 தலைவர்கள் பரிந்துரைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் பெரும் தோல்வியைச் சந்தித்ததையடுத்து, கட்சியின் செயற்குழுக் கூட்டம் மாலை 4 மணிக்கு கூடுகிறது.

இந்த நிலையில், ஜி23 தலைவர்கள் கட்சியின் தலைவர் பதவிக்கு முகுல் வாஸ்னிக் பெயரைப் பரிந்துரைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுபற்றி ஜி23 தலைவர்களில் ஒருவர் கூறியதாவது:

"கட்சியின் தலைவர் பதவிக்கு முகுல் வாஸ்னிக் பெயரைப் பரிந்துரைத்தோம். ஆனால், அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

2000-வது தொடக்கத்தில் சோனியா காந்தி எப்படி கட்சியை வழிநடத்தினாரோ, அதுபோல புதிய தலைவர் கட்சியை வழிநடத்த வேண்டும். சோனியா காந்தி இடைக்காலத் தலைவர் என்பதால், கேசி வேணுகோபால், அஜய் மாக்கென் மற்றும் ரண்தீப் சுர்ஜேவாலா ஆகியோராலே கட்சி நடத்தப்படுகிறது.

ராகுல் காந்தி தலைவர் கிடையாது. ஆனால், அவர் பின்னின்று வழிநடத்தி முடிவெடுக்கிறார். அவர் வெளிப்படையாக அறிவிக்கமாட்டார். நாங்கள் கட்சியின் நலன் விரும்பிகள், எதிரிகள் அல்ல."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.