அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

திருமண ஊர்வலத்தில் மோடியைப் புகழ்ந்து பாட்டு: பயன்படுத்திக்கொண்ட திருடர்கள்!

திருமண ஊர்வலத்தில் பிரதமர் நரேந்திர மோடியைப் புகழ்ந்து பாடல் ஒலிபரப்பியதற்காக மர்ம நபர்கள் ரகளையில் ஈடுபட்டு, திருமண வீட்டாரைத் தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

News image
Updated On :13 மார்ச் 2022, 1:07 pm

DIN

உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற திருமண ஊர்வலத்தில் பிரதமர் நரேந்திர மோடியைப் புகழ்ந்து பாடல் ஒலிபரப்பியதற்காக மர்ம நபர்கள் ரகளையில் ஈடுபட்டு, திருமண வீட்டாரைத் தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

 திருமண ஊர்வலத்தில் ரகளையில் ஈடுபட்ட மர்ம நபர்கள், 2 லட்ச ரூபாய் பணத்தையும் நகையையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

உத்தரப் பிரதேச மாநிலம் அவுர்ரியா மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு திருமண ஊர்வலம் நடைபெற்றது.  உத்தரப் பிரதேசத்தில் மீண்டும் பாஜக வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில் திருமண ஊர்வலத்தில் பிரதமர் நரேந்திர மோடியையும், யோகி ஆதித்ய நாத்தையும் புகழ்ந்து பாடல்கள் ஒளிபரப்பப்பட்டன. 

அப்போது ஊர்வலத்தில் நுழைந்த மர்ம நபர்கள் பாடலை நிறுத்துமாறு ரகளையில் ஈடுபட்டுள்ளனர். அதோடு மட்டுமல்லாமல், ஊர்வலத்தில் பங்கேற்ற வாகனங்களை அடித்து நொறுக்கி, நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். 

இது குறித்து திருமண வீட்டைச் சேர்ந்த நபர் கூறியதாவது, நாங்கள் திருமண விழாவில் பங்கேற்றிருந்தோம். நான்கு கார், மூன்று வேன்களில் உறவினர்கள் சூழ திருமண ஊர்வலம் நடைபெற்றது.  அதில் நரேதிர மோடி - ஆதித்ய நாத்தை புகழ்ந்து பாடல் இசைக்கப்பட்டது. அப்போது நுழைந்த மர்ம நபர்கள் பாடலை நிறுத்தக்கோரி ரகளையில் ஈடுபட்டனர். மேலும், ஊர்வலத்தில் பங்கேற்றிருந்த வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தி, கார் கண்ணாடிகளை உடைத்தனர். இதில் பலருக்கு காயம் ஏற்பட்டது. 

கார் கண்ணாடியை உடைத்து காரில் இருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் மணகனுக்கு அளிக்க வேண்டிய நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர் என்று கூறினார். 

இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.