
கோப்புப்படம்
வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் ஒரு வாரத்திற்கு வெப்பநிலை உயராது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடமேற்கு இந்தியாவில் இடியுடன் மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக, மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான், உத்தரபிரதேசம், தில்லி, மத்தியபிரதேசம் என பல்வேறு வடமாநிலங்களை வெப்பம் அதிகமாக காணப்படுகிறது.
பல மாநிலங்களில் வெப்பம் 45 டிகிரி செல்சியசை தாண்டி பதிவாகியுள்ளது. வெப்பம் அதிகரித்து வருவதால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்.