லக்னௌ: ஒரு வயது குழந்தையைக் கொலை செய்த குற்றத்தில் 13 வயது சிறுவன் ஞாயிறன்று கைது செய்யப்பட்டார். தனது குற்றத்தை சிறுவன் ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
குழந்தையைக் கொலை செய்தது ஏன் என்று விசாரித்த காவலர்களுக்கு, சிறுவன் கூறிய தகவல் பேரதிர்ச்சியாக இருந்துள்ளது.
நான்கு நாள்களுக்கு முன்பு, சிறுவனின் குடும்பத்தாரை, கொலையுண்ட குழந்தையைன் தந்தை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், சிறுவனையும் அவர் அடித்ததாகவும், அதனால் ஆத்திரமடைந்து திட்டமிட்டுக் குழந்தையைக் கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையும் படிக்க.. 2,500 புதிய பேருந்துகள் வாங்க திட்டம்: அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்
லக்னௌ அருகே சைர்பூர் காவல்நிலைய பகுதியில் அமைந்துள்ள பள்ளியின் குடிநீர் தொட்டியில் இருந்து இரண்டு நாள்களுக்கு முன்பு ஒரு வயது பெண் குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து காவலர்கள் விசாரணையத் தொடங்கினர்.
இறுதியில், குழந்தையை சிறுவன் கொலை செய்யப்பட்டது உறுதியானதைத் தொடர்ந்து அவன் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிறுவன் கூறியதாவது, ஒரு வயது குழந்தை, அவளது வீட்டு வாயிலில் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். உடனே குழந்தையைத் தூக்கிக் கொண்டு என் பள்ளிக்குச் சென்று குழந்தையின் கால்களில் செங்கல்லைக் கட்டி தண்ணீர் தொட்டிக்குள் போட்டேன் என்று அவனது பெற்றோர் முன்னிலையில் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே 5, மேற்கு வங்கத்தில் பாஜக முதல்வர் பதவியேற்பார் : அமித் ஷா உறுதி

டிம் டேவிட், ஹார்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!

”உங்கள் பிரார்த்தனைகளுக்கு நன்றி!மருத்துவமனையிலிருந்து வானதி சீனிவாசன்

தமிழ்நாட்டிற்கு வடக்கிலிருந்து ஆபத்து: மு.க. ஸ்டாலின்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


