புது தில்லி: 2022-23ஆம் ஆண்டில் இந்தியாவின் கோதுமை கையிருப்பு, கடந்த 2016-17ஆம் ஆண்டில் இருந்ததைப் போன்று மிகவும் குறையலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இது கடந்த 13 ஆண்டுகளில் கோதுமை கையிருப்பு மிகவும் குறைவாக இருந்த இரண்டாவது ஆண்டாகவும் கடந்த 15 ஆண்டுகளில் மத்திய அரசு மிகக் குறைவாக கோதுமை கொள்முதல் செய்யும் ஆண்டாகவும் உள்ளது.
உணவுப் பொருள் இருப்பை உறுதி செய்யும் வகையில், கோதுமை பற்றாக்குறை காரணமாக, மே 13ஆம் தேதி வெளிநாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதியை மத்திய அரசு தடை செய்திருந்தது.
பொது வழங்கல் துறையின் மூலம் ஏழை மக்களுக்கு கோதுமை வழங்குவதற்குத் தேவையான அளவுக்கு கையிருப்பு உள்ளது என்று மத்திய உணவுத் துறை தெரிவித்துள்ளது.
மார்ச் மாதம் முதல், கோதுமை உற்பத்தி செய்யும் மாநிலங்களில் கடுமையான கோடை வெப்பம் வாட்டி வந்ததால், கோதுமை உற்பத்தி பாதிக்கப்பட்டு, வரத்துக் குறைந்துள்ளது. எனவே, வரத்துக் குறைந்திருப்பதால், பொது வழங்கல் துறையின் மூலம் கோதுமை விநியோகத்தை சீராக வைத்திருக்க ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆட்சி சிறப்பாக இருக்கும்! செங்கோட்டையன் பேட்டி | TVK | Sengottayan

மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்!

தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டி

சிஎஸ்கேவுக்கு 156 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேபிடல்ஸ்!
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


